கேரளாவில் உள்ள அம்பலவயல் பகுதியில் 18 வயதான கோகுல் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில் திடீரென அந்த சிறுமியுடன் அவர் மாயமாகிவிட்டார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து கோகுல் மற்றும் சிறுமியை மீட்டனர். போலீசார் சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்த நிலையில் கோகுலை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் போலீஸ் ஸ்டேஷனில் இருந்த கோகுல் இன்று காலை பாத்ரூம் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் கழிவறைக்கு சென்ற கோகுல் நீண்ட நேரமாக திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த போலீசார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கோகுல் தன்னுடைய சட்டையால் தூக்கிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார்.  அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.