
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள சாதிகாபாத் பகுதியில், சிறுநீரகக் கற்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்ற பெயரில் பல கிராம மக்களின் சிறுநீரகங்கள் ஏமாற்றி அகற்றப்பட்டுள்ள சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சமீபத்தில் வெளிவந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ, சமூக ஊடகங்களில் வேகமாக பரவி, வருகிறது. இந்த வீடியோவில், 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கட்டிலில் படுத்திருக்கின்றனர், அவர்களில் சிலர் குழந்தைகளாகவும் இருக்கின்றனர்.
வீடியோவில், புற்றுநோய்கள் போல வயிற்றில் பட்டைகள் கட்டப்பட்ட குழந்தைகள் கூட தெரிகின்றனர். ஊடகங்களின் தகவலின்படி, சில நபர்கள் மருத்துவர்கள் போல நடித்து, “உங்கள் சிறுநீரகத்தில் கல் இருக்கிறது, அறுவை சிகிச்சை தேவை” என கூறி, மலிவான சிகிச்சை என்ற பெயரில் கிராம மக்களை ஏமாற்றி அழைத்துள்ளனர். சிகிச்சைக்காக சென்ற இந்த மக்கள், மருத்துவ சேவையென நம்பிய இடத்தில் தங்கள் சிறுநீரகங்களை இழந்துள்ளனர் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.
گردے نکال لیے😭😭
صادق آباد پنجاب میں 25 بچوں کو گردوں میں پتھری کے اپریشن کا کہہ کر سب کے گردے نکال لیے گئے
توبہ استغفار 😔
حکومت کہاں غائب ہے؟🤔😡 pic.twitter.com/UOY7182HMK
— Naseer Awan(نصیر اعوان) (@MNasAwan555) June 2, 2025
இந்த வீடியோ வெளியானதும், மக்கள் பெரும் கோபத்துடன் அரசாங்கம் இந்த விவகாரத்தில் தலையிட்டு, குற்றவாளிகளை கைது செய்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். @pakistan_untold என்ற X கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோ, ஏராளமான பார்வையாளர்களை ஈர்த்து, ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். “இதுபோன்ற மனிதநேயம் இல்லாதவர்கள் பாகிஸ்தானில் மட்டுமே இருக்க முடியும்”, “மக்கள் தங்களின் சொந்த நலனுக்காக இப்படி செய்யக்கூடுமா?” எனக் கேட்டவண்ணம் பலரும் கொதித்துக் கொண்டிருக்கின்றனர். மனிதாபிமானத்தின் முழு சிதைவாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது.