அமெரிக்காவின் சிகாகோ நகரத்தில் உள்ள “ஃப்ளாவ்ஸ்” (Flavas) என்ற உணவகத்தில் மூன்று பேர் கொண்ட குழு சுமார் $200 (இந்திய மதிப்பில் ரூ.16,800) மதிப்புள்ள இறால், இரால் உள்ளிட்ட கடல் உணவுகளை சாப்பிட்ட பிறகு பணம் செலுத்தாமல் உணவகத்தை விட்டு ஓடி தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உணவக உரிமையாளர்கள் அந்த நபர்களை அடையாளம் கண்டறிந்தாலும், நேரடியாக அவர்களிடம் பணம் வாங்காமல், சட்டப்பூர்வமாக போலீசில் புகார் அளிக்க முடிவு செய்தனர்.

இந்த விவகாரத்தில் சிகாகோ போலீசில் திருட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்கள் தப்பி சென்ற வீடியோ  வெளியாகி  சமூக வலைதளங்களில் பரவலான கண்டனங்களைப் பெற்றுள்ளது. சிலர் “அது வெறும் $200தான்” எனச் சொன்னாலும், பலர் இந்த மாதிரி செயலில் ஈடுபடுவது பண்பாட்டு மரியாதைக்கு எதிரானது எனக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சம்பவம் நடந்தபோது உணவகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளில் அந்த மூவரும் சிரித்தபடி உணவகத்தை விட்டு ஓடிச் செல்வது தெளிவாக பதிவாகியுள்ளது.