நாடு முழுவதும் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இணைந்து தேனி மற்றும் திருச்சி தொகுதியில் அமமுக கட்சி போட்டியிட்டது. மேலும் அதிமுக தலைமையிலான கூட்டணி  40 தொகுதிகளிலும் போட்டியிட்டது .ஆனால் இந்த இரண்டு கட்சிகளுமே தேர்தலில் படுதோல்வி அடைந்தது.

இந்த நிலையில் “சிந்திப்போம் செயல்படுவோம் சின்னம்மா தலைமை ஏற்போம்” என்று சேலம் மாவட்டம் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது. இது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.