
நான் இன்று சினிமாவில் இருக்கிறதுக்கு காரணமே நடிகர் சிம்பு தான் என்று நடிகர் சந்தானம் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா தற்போது பாலிவுட் வரை கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் வாடகை தாய் மூலமாக இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுக் கொண்டதாக அறிவித்தனர். இந்நிலையில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து தற்போது பல திரைப்படங்களில் ஹீரோவாக கலக்கி வருபவர் தான் நடிகர் சந்தானம். தற்போது விஷால் நடிப்பில் வெளியான மதகஜராஜா படத்தில் நடித்து காமெடியில் கலக்கியுள்ளார்.
இந்நிலையில் இவர் அண்மையில் அளித்த பேட்டியில், “நான் இன்று சினிமாவில் இருக்கிறதுக்கு காரணமே நடிகர் சிம்பு தான். அவர் இல்லனா இன்னைக்கு நான் இல்ல. டிவில நடிச்சிட்டு இருந்த என்னை கூட்டிகிட்டு வந்து வல்லவன் படத்தில் நடிக்க வைத்து எனக்கு வாழ்க்கை கொடுத்தது சிம்பு தான்” என்று நெகிழ்ச்சியாக பேசி உள்ளார்.