வன உயிரினத்தை சாகசம் என்ற பெயரில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்றின் வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இதில், தனது குழந்தையை ஒரு சிங்கத்தின் மீது அமர வைத்து புகைப்படம் எடுக்க ஒரு தந்தை முயற்சிக்கிறார்.

வீடியோவில், அந்த குழந்தை பயந்து அழுதுகொண்டிருப்பது காணப்படுகிறது. சிங்கம் ஆரம்பத்தில் அமைதியாக இருந்தாலும், சிறிது நேரத்தில் கோபமடைந்து திரும்பி தாக்கும் நிலைக்கே வந்துவிடுகிறது. இந்த அதிர்ச்சி சம்பவம் Bad Parenting TV எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியானது.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானவுடன், மக்கள் இருமுனை விமர்சனத்தில் ஈடுபட்டனர். “ஒரு பிள்ளையின் உயிரை அபாயத்தில் வைத்தவர் தந்தை எனக் கருதப்படலாமா?” என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர்.

ஒருவர் “இவனை சிறையில் அடைக்கவேண்டும்” என கூறியுள்ளார். பெற்றோர் குழந்தைக்கு நல்ல மாதிரி காட்ட வேண்டும் என்பதற்கேற்ப இது மிகவும் மோசமான எடுத்துக்காட்டு என அனைவரும் தெரிவித்துள்ளனர். குழந்தை மனதுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய செயல் என பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், இந்த சம்பவம் விலங்குத் துன்புறுத்தல் என்ற கோணத்திலும் விமர்சிக்கப்படுகிறது. “சிங்கம் ஒரு காட்டுயிர், அதை காட்சிக்காக பயன்படுத்துவது கொடுமை” என ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். “இதைப் போன்று விலங்குகளை மருந்து கொடுத்து அமைதியாக வைத்திருக்கின்றனர். மனிதன் மகிழ்ச்சிக்காக விலங்கின் இயல்பு வாழ்வை அழிக்கக் கூடாது” எனவும் பலர் தங்களது கோபத்தை பதிவு செய்துள்ளனர்.