சமூக ஊடகங்களில் மக்கள் அசாதாரணமாகவும் ஆபத்தானதாகவும் செய்கிற ஸ்டண்ட்கள் இன்று பெருகியுள்ளன. ஸ்கேட்போர்டிங், பைக் ஸ்டண்ட், விலங்குகளுடன் சாகசம் என பலவிதமான வீடியோக்கள், ரீல்ஸ்களாக வேகமாக பரவி வருகின்றன. இந்நிலையில், ஒரு சிறுவன் ஸ்கேட்போர்டில் எருமைக் கூட்டத்தை கடக்க முயன்றபோது, ஒரு எருமை தனது கொம்பால் தூக்கி அவனை தரையில் வீசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

@Animalbelngjerk என்ற சமூக வலைதள கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், ஒரு சிறுவன் ஸ்கேட்போர்டில் சாலையில் பயணிக்கிறான். அதே நேரத்தில், ஒரு எருமைக் கூட்டம் சாலையை கடக்கிறது. சிறுவன், அதனை ஒரு சாகசமாக நினைத்து எருமைகளை கடந்து ஸ்டண்ட் செய்ய முயற்சிக்கிறான். ஆனால், எதிர்பாராதவிதமாக, ஒரு எருமை திடீரென அவனை நோக்கி ஓடி வந்து, தனது கொம்பால் தூக்கி தரையில் வீசுகிறது.

 

 

இந்த வீடியோ பார்வையாளர்களிடம் நகைச்சுவையையும் அதிர்ச்சியையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 1.5 கோடியே அதிகமான பார்வைகள் பதிவாகியுள்ள இந்த வீடியோ, 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது. “இந்த சிறுவன் எருமை கைதட்டும் என்று நினைத்தான்… ஆனா கொம்பு தான் பறந்தது” என்ற கருத்து ஒன்று அதிகம் வைரலாகியுள்ளது. மேலும், “எருமை வா என்னைக் கொல்லு” என்ற பழமொழிக்கு சரியான உதாரணம் இது என்றும் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

இது போன்ற ஆபத்தான ஸ்டண்ட்கள், குறிப்பாக விலங்குகளுடன் செய்யப்படுவது, உயிருக்கு மிகப்பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதையும் சமூக வலைதள பயனர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இந்த வீடியோ ஒரு பாடமாகவும், விழிப்புணர்வாகவும் தற்போது பரவி வருகிறது.