தென்னிந்திய சினிமா அளவில் தற்போது முன்னணி நடிகையாக கலக்கி கொண்டிருப்பவர் தான் நடிகை சாய் பல்லவி. இவருடைய நடிப்பில் தமிழில் கடந்த ஆண்டு வெளியான அமரன் திரைப்படம் 340 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. இந்த திரைப்படத்தின் மூலம் சாய் பல்லவி தமிழ் ரசிகர்கள் மனதில் குடியேறிவிட்டார். இதனைத் தொடர்ந்து சாய்பல்லவி நடிப்பில் சமீபத்தில் தண்டேல் திரைப்படம் வெளியானது. இந்தத் திரைப்படத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக கலக்கிக் கொண்டிருந்த சாய் பல்லவி தற்போது பாலிவுட் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். அதாவது ராமாயணம் கதையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகின்றார்.

இப்படியான நிலையில் நடிகை சாய் பல்லவி சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசிய விஷயம் பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்தப் பேட்டியில், என் பாட்டி 21 வயதாக இருக்கும்போது என் திருமணத்தில் நான் அணிந்து கொள்ள எனக்கு ஸ்பெஷல் ஆக ஒரு புடவையை பரிசாக வழங்கினார். எனக்கு திருமணம் எப்போது நடைபெறும் என எனக்கு தெரியாது. ஆனால் தேசிய விருது போன்று நான் விரும்பும் உயரிய விருதை பெறும் போது அந்த புடவையை நான் அணிந்து கொள்வது சரியாக இருக்கும் என்று நினைக்கின்றேன். அதனால் எனக்கு தேசிய விருது கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று சாய்பல்லவி விருப்பம் தெரிவித்துள்ளார்.