நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாவது, மத்திய அரசின் பெரிய திட்டங்கள் தமிழகத்திற்கு வருவதில்லை. புதிய திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டுவர முயற்சி செய்யுங்கள். இந்த குரலை நம்முடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்ப வேண்டும். மென்மையாக பேசக்கூடாது. கடுமையாக பேச வேண்டும் என கூறியுள்ளார்.