உலக அளவில் தற்போது ஏஐ தொழில்நுட்பம் என்பது மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில் பிரபலமான ஓபன் ஏஐ நிறுவனம் செயற்கை நுண்ணறிவு மூலமாக இயங்கும் சாட்ஜிபிடி தொழில்நுட்பத்தை உருவாக்கியது. இந்நிலையில் ஓபன் ஏஐ நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்காக அமெரிக்காவின் காப்புரிமை விதிகளை மீறியதாக கடந்த வருடம் சசிர் பாலாஜி என்ற 26 வயது வாலிபர் குற்றம் சாட்டிருந்தார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராக இருக்கும் நிலையில் அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் வசித்து வந்தார். இவர் அவருடைய இல்லத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில் அவருடைய தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டதற்கான காயங்கள் இருந்தது.

இது தொடர்பாக விசாரணை செய்த காவல்துறையினர் அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டதாக கூறி வழக்கை முடித்து வைத்து விட்டனர். ஆனால் அந்த வாலிபரின் பெற்றோர் தங்கள் மகனை ஓபன் ஏஐ நிறுவனத்தினர் தான் கொலை செய்து விட்டதாக பரபரப்பு குற்ற சாட்டினை முன் வைத்துள்ளனர். அந்த வாலிபரின் தாய் பூர்ணிமா ராவ் தங்கள் மகனின் மரணம் தொடர்பாக நேர்மையாக விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள நிலையில் தங்கள் மகன் இறந்த பிறகு அந்த நிறுவனத்திற்கு எதிராக வைத்திருந்த சில ஆவணங்களும் காணாமல் போய்விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த வருடம் நவம்பர் 26 ஆம் தேதி வாலிபர் இறந்த  நிலையில் காப்புரிமை பெறப்பட்ட தங்களுடைய உருவாக்கங்களை திருடி தான் ஓபன் ஏஐ நிறுவனம் சாட்ஜிபிடியை தயார் செய்ததாக சில கணினி பொறியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள்  அமெரிக்காவில் வழக்கு தொடர்ந்த நிலையில் இதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக கூறி பாலாஜி பேசிய வீடியோவை பிரபல ஊடகம் ஒன்று வெளியிட்டு இருந்தது.

அந்த வாலிபர் அந்த சாட்ஜிபிடிக்கு பயிற்சி வழங்குவதற்காக தொழிலதிபர்கள் மற்றும் வணிகர்களின் தரவுகள் திருடப்படுவதாக குற்றம் சாட்டி இருந்த நிலையில் உலகிற்கு தீங்கு விளைவிக்கும் இந்த தொழில்நுட்பத்தை ஊக்குவிக்க விரும்பாததால் அந்த நிறுவனத்தில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். மேலும் இதைத் தொடர்ந்து அந்த வாலிபர் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்த நிலையில் தற்போது காவல்துறையினர் இந்த வழக்கை முடித்து வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.