
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையான நிலையில் மனுக்கள் நிராகரிப்பு பற்றி சம்பந்தப்பட்ட மகளிருக்கு எழுத்துப்பூர்வமாக விளக்கம் கொடுக்கப்படும். அதிகாரிகள் தரும் விளக்கத்தில் ஏதாவது குறைகள் இருந்தால் மீண்டும் மனு செய்து தங்களை ஆயிரம் ரூபாய் பெற தகுதி உடையவர்களாக மாற்றிக் கொள்ளலாம். தகுதியான ஒரு பயனாளி கூட விடுபட மாட்டார்கள் என அரசு விளக்கம் அளித்துள்ளது.