
சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி எம்கேபி நகரில் என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் பல வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். இவருக்கு லாரன்ஸ், ஆகாஷ்(20) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் ஆகாஷ் 12-ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு ஒரு துணிக்கடையில் ஆறு மாதமாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் கிரேசி சர்ச்சுக்கு சென்று விட்டார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த கிரேசி கதவை நீண்ட நேரமாக தட்டியுள்ளார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.
அப்போது தனது மகன் ஆகாஷ் தூக்கில் சடலமாக தொங்குவதைக் கண்டு கதறி அழுதார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆகாஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. கடந்த சில மாதங்களாக ஆகாஷ் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண் ஆகாசுடன் சரியாக பேசவில்லை. இதனால் மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.