மத்திய பிரதேசம் மாநிலத்தில் சந்திர பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி 14 வயதில் மகள் 8 வயதில் மகன் உள்ளனர். இந்த நிலையில் சமையல் செய்து கொண்டிருந்தபோது சந்திர பிரகாஷின் செல்போன் சூடான எண்ணெயில் தவறி விழுந்தது.

நொடியில் செல்போன் பேட்டரி வெடித்து சிதறியதால் சந்திர பிரகாஷ் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே சந்திர பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.