
இந்தியாவில் சமூகவலைத்தளங்களில் குழந்தைகள் பாலியல் வன்முறை புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாவது 300% வரை அதிகரித்து உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது. தேசிய மனித உரிமை ஆணையமானது இதை தானாக முன் வந்து விசாரணைக்கு எடுத்து உள்ளது.
இந்த செயல் குழந்தைகளின் மனித உரிமைகளை மீறக்கூடியது என கவலை தெரிவித்து உள்ளது. ஆகவே இத்தகைய படங்கள் வெளியாவதை தடுப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து 6 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கும், அனைத்து மாநில, யூனியன் பிரதேச போலீஸ் டி.ஜி.பி.களுக்கும் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.