நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தடம்பதித்துள்ள சந்திரயான் 3 திட்டத்தில் பங்கேற்ற விஞ்ஞானிகளில் முக்கியமானவர் மணிப்பூரை சேர்ந்த நிங்தவுஜம் ரகு சிங். இந்த திட்டத்திற்காக சுமார் இரண்டு வருடங்களாக தனது குடும்பத்தையும் வீட்டையும் மறந்து ரகு சிங் இந்த பணிகளில் ஈடுபட்டிருந்தார். தற்போது இந்த திட்டம் மிகப்பெரிய வெற்றி அடைந்திருப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் “சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கியது இந்தியாவின் சிறந்த தருணங்களில் ஒன்று. ககன்யான் திட்டத்தின்படி விண்வெளிக்கு இந்தியர்களை அனுப்புவதற்கும் சூரியனை ஆய்வு செய்வதற்கான அத்தியாயத்தின் தொடக்கம் தான் இந்த சந்திரயான் 3 தரையிறக்கம். தற்போது மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.
சந்திரயான் 3 வெற்றி….. அடுத்த இலக்கு இதுதான் – மணிப்பூர் விஞ்ஞானி
Related Posts
பாஜக மூத்த தலைவர் பானுபிரகாஷ் காலமானார்….. அரசியல் தலைவர்கள் இரங்கல்…!!!
கர்நாடக மாநிலத்தின் பாஜக மூத்த தலைவர் பானுபிரகாஷ், திடீர் மாரடைப்பால் காலமானார். கர்நாடக அரசு பெட்ரோல், டீசல் விலையை சமீபத்தில் உயர்த்தியது. இதை கண்டித்து ஷிவமொக்கா மாவட்டத்தில் பாஜக சார்பாக இன்று போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இவருக்கு, திடீரென மாரடைப்பு…
Read moreவிமானத்தில் பயணிக்கு கொடுக்கப்பட்ட உணவில் கிடந்த பிளேடு…. ஏர் இந்தியா சொன்ன காரணம்….!!
பெங்களூருவில் இருந்து சென்ற ஏர் இந்த விமானத்தில் பயணித்த மதுரஸ் பால் என்ற பத்திரிக்கையாளர் தனக்கு விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் பிளேடு கிடந்ததாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஏர் இந்தியாவில் வழங்கப்பட்ட அத்திப்பழச் சாட் உணவில்…
Read more