
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது.
அதன் பிறகு பாகிஸ்தான் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறி வைத்து தாக்குதல் நடத்திய போது பாகிஸ்தானின் அனைத்து முயற்சிகளையும் இந்தியாவின் பாதுகாப்பு படைகள் தகர்த்தெறிந்தன.
நேற்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதல் பற்றி விளக்கம் அளித்தார். முப்படைகளும் தயார் நிலையில் இருப்பதை பிரதமர் மோடி உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலம் ஆதம்பூரில் உள்ள விமானப்படை தளத்திற்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். எல்லையில் விமானப்படை வீரர்களுடன் உரையாற்றிய பிரதமர் ஆதம்பூர் விமானப்படைத்தளத்தை தாக்கியதாக பாகிஸ்தான் கூறியிருந்த நிலையில் திடீரென ஆய்வு செய்துள்ளார்.
இந்த நிலையில் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் கூறியதாவது, பாரத் மாதாகி ஜெய் என்ற வார்த்தையின் சக்தியை தற்போது உலகம் உணர்ந்துள்ளது. நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவர்களை பழி வாங்கி விட்டீர்கள். வெறும் இருபது நிமிடங்களில் பாகிஸ்தானில் இருந்த ஒன்பது தீவிரவாத முகாம்களை தகர்த்தெறிந்து விட்டோம் என கூறியுள்ளார்.