
நாம் தமிழர் கட்சியிலிருந்து அடுத்தடுத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் விலகி வருகிறார்கள். அந்த வகையில் இன்று கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளனர். அதன்படி ராமச்சந்திரன் உட்பட கிட்டத்தட்ட 20 பேர் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் ராமச்சந்திரன் பேசியதாவது, கட்சியில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படும் முறை சரி கிடையாது. உறவினர்களே எங்களை மதிப்பதில்லை.
மக்கள் நம்மை கவனிப்பது கிடையாது. கொள்கை சார்ந்த விஷயங்களில் நாம் தமிழர் கட்சியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பொறுப்பாளர்கள் மீதும் கட்சியின் மீதும் எங்களுக்கு எந்தவிதமான வருத்தமும் கிடையாது. அமைதியான முறையில் நாங்கள் கட்சியிலிருந்து விலகிக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார். மேலும் இதற்கு முன்னதாக விலகிய மாவட்ட செயலாளர்கள் சீமான் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில் தற்போது ராமச்சந்திரன் அமைதியான முறையில் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.