தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.

இந்த தேர்வு முடிவுகளை  மாணவர்கள் tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதன்பிறகு தமிழகம் முழுவதும் 95.03 சதவீதம் வரை மொத்த தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவிகள் 96.70 சதவீதமும் மாணவர்கள் 93.16 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவிகள் தான் இந்த முறையும் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் கரூர் மாவட்டம் குளித்தலையில் தேர்வு எழுதி முடித்துவிட்டு ரிசல்டுக்காக காத்திருந்த மாணவர் ஷியாம் சுந்தர் மகாமாரியம்மன் கோவில் திருவிழாவில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். 12-ஆம் வகுப்பு தேர்வில் ஷியாம் சுந்தர் 351 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இன்று ரிசல்ட் வெளியானதும் ஷியாம் சுந்தரின் பெற்றோரும், நண்பர்களும் கண்ணீரில் மூழ்கினர்.