அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள லேடி லேக் பகுதியில் உள்ள ‘சாம்ஸ் கிளப்’ என்ற பெரிய கடையில், ஓய்வு பெற்ற 70 வயதுடைய பேட்ரிக் பிரான்சிஸ் மிட்செல் என்ற நபர், கடையின் உணவுப் பொருள் பகுதியில் உள்ள வியன்னா தொத்திறைச்சி மற்றும் ஸ்பேம் tins மீது சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயல் காரணமாக, ரூ.9 லட்சம் மதிப்புள்ள (சுமார் $10,500) உணவுப் பொருட்கள் மாசுபட்டதாக கடை நிர்வாகம் தெரிவித்தது.

வியன்னா தொத்திறைச்சி என்பது பொட்டலியில் அடைக்கப்பட்ட, நன்கு சமைக்கப்பட்ட, பன்றி அல்லது கோழி இறைச்சியால் தயாரிக்கப்பட்ட சிறிய தொத்தி சாஸேஜ்கள். இது சுலபமாக சாப்பிடும் உணவாக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பிரபலமாக உள்ளது. மிட்செல் இந்த உணவுப்பொருட்கள் மீது சிறுநீர் கழிப்பதைக் கண்ட ஒருவர், உடனடியாக கடை ஊழியர்களிடம் புகார் தெரிவித்தார். ஆனால், மிட்செல் எதுவும் நடக்காதது போல, கடையின் உட்பகுதியில் 10 நிமிடங்கள் அமர்ந்திருந்தார், பின்னர் பொருட்கள் வாங்கிவிட்டு வெளியேறினார்.

அவரை கண்காணிப்பு காட்சிகள் மற்றும் உறுப்பினர் விவரங்கள் மூலம் அவரை போலீசார் அடையாளம் கண்டுபிடித்தனர். அவரது செயலால் மாசுபட்ட 345 ஸ்பேம் டின் கான்கள் மற்றும் 188 வியன்னா சாஸேஜ் tins அனைத்தும் அழிக்கப்பட்டன. அவர் புளோரிடாவில் உள்ள வீட்டில் கைது செய்யப்பட்டு, தற்போது ரூ.2.5 லட்சம் ($3,000) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் மீதான வழக்கு லேக் கவுண்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. சமூக ஊடகங்களில் இந்தச் சம்பவம் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. “கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என்ற கருத்துக்கள் நெட்டிசன்களிடையே பரவி வருகின்றன.