மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி பெரும் விபத்து நிகழ்ந்துள்ளது. இன்று காலை 9.30 மணி அளவில் பயங்கர ரயில் விபத்து நடந்த நிலையில் இந்த விபத்தில் நான்கு பயணிகள் பலியானதாகவும் பலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பேரிடர் மீட்பு குழு மற்றும் மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்தில் உள்ள நிலையில் தற்போது மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த விபத்து செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்ததாகவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும் சம்பவ இடத்திற்குச் சென்ற ரயில்வே போலீசார் விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.