
இந்தியாவில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பிறகு விமான போக்குவரத்து எந்தவித சிக்கலும் இல்லாமல் வழக்கம் போல் நடைபெற்ற வருகின்றது. இன்னும் இரண்டு மாதங்களில் கோடை விடுமுறை தொடங்க உள்ளதால் இதனை முன்னிட்டு பொதுமக்கள் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா தளங்கள் மற்றும் சொந்த ஊர்களுக்கு செல்ல இப்போதே விமான டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் வெளிநாடு மற்றும் கோவா, டெல்லி, மும்பை உள்ளிட்ட இடங்களுக்கான விமான கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து டெல்லிக்கு செல்ல விமான கட்டணம் 6000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து துபாய் செல்வதற்கான கட்டணம் 20 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதனைப் போலவே சென்னையில் இருந்து கோவா செல்வதற்கான கட்டணம் 4400 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு விமான பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.