தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 38 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். திருமணமான இவர் கட்டுமான தொழிலாளியாக வேலை பார்த்து வரும் நிலையில் கட்டிட வேலைக்கு செல்லும்போது வெளியூரை சேர்ந்த ஒரு கொத்தனாருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.

இவர்கள் இருவரும் நெருங்கி பழகிய நிலையில் விருதுநகரில் நடந்த ஒரு திருமண விழாவிற்கு அந்த பெண்ணும் கொத்தனாரும் சென்றனர். அவர்கள் இருவரும் ஒரு ஹோட்டலில் அறை எடுத்து ஒன்றாக தங்கிய நிலையில் இது அந்த கொத்தனாரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணுக்கு தெரிய வந்தது.

இதனையடுத்து அந்த 40 வயது பக்கத்து வீட்டுப் பெண் நீயும் அந்த பெண்ணும் ஹோட்டலில் ஒன்றாக இருந்த சிடி என்னிடம் இருக்கிறது. நான் இதனை உன் மனைவியிடம் கொடுக்கப் போகிறேன் என்று மிரட்டியுள்ளார். அப்படி கொடுக்காமல் இருக்க வேண்டுமென்றால் 10 லட்ச ரூபாய் பணம் கேட்டார்.

இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் அவமானம் என நினைத்த கொத்தனாரும்  7 பவுன் தங்க நகைகள் மற்றும் 2 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை அந்த பெண்ணுக்கு கொடுத்தார். இருப்பினும் அந்தப் பெண் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டிய நிலையில் ஒரு கட்டத்தில் கொத்தனாருக்கு அவரிடம் சிடி எதுவுமில்லை என்பது தெரிய வந்தது.

இது பற்றி அவர் கேட்டதோடு தான் கொடுத்த பணத்தை திரும்ப கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு அந்த பக்கத்து வீட்டு பெண்ணும் அவரது மகனும் சேர்ந்து கொத்தனாருக்கு கொலை மிரட்டல் விடுத்த நிலையில் இது தொடர்பாக அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்‌.

அந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து தற்போது தலைமறைவான அந்த பெண்ணையும் அவரது மகனையும் தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.