
பஞ்சாப் மாநிலத்தில் ஜெஹ்ரா (26) என்ற இளம் பெண் வசித்து வந்துள்ளார். இவர் தனது மாமியாருடன் தங்கி இருந்தார். ஜெஹ்ராவின் கணவர் காதர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். தற்போது ஜெஹ்ரா 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த நிலையில் மாமியார் மருமகளுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டது. சம்பவம் நடைபெற்ற அன்று இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த மாமியார் தனது மருமகளை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்தார். 25 துண்டுகளாக இளம் பெண்ணை வெட்டியுள்ளார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளம்பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் இளம் பெண்ணின் மாமியாரை கைது செய்தனர்.