தஞ்சாவூர் மாவட்டம் நடுவிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ரோஜா என்ற பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இவருக்கு ராஜா என்ற கணவர் உள்ளார். இந்த நிலையில் ரோஜா 100 நாள் வேலைக்கு கிளம்பி கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டுக்காரரான ஆரோக்கியதாஸ் என்பவர் ரோஜாவை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். மேலும் அவரது உடலை தரதரவன இழுத்து வந்துள்ளார். கள்ளக்காதல் விவகாரத்தில் ரோஜா கொலை செய்யப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரோஜாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர் இந்த கொலை குறித்த கூடுதல் விவரங்கள் முழு விசாரணைக்கு பிறகு தான் தெரியவரும் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.