
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மல்லிப்பட்டினம் சின்னமலை பகுதியில் முத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமணி என்ற மகள் இருந்துள்ளார். இவர் மல்லிபட்டணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த மதன் என்பவர் ரமணியை திருமணம் செய்து கொள்ள விரும்பியுள்ளார். அவர் தனது பெற்றோரிடம் தனது விருப்பத்தை கூறி ரமணியை பெண் கேட்க சொல்லியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மதனின் பெற்றோர் பெண் கேட்டு சென்றனர். அப்போது ரமணியின் பெற்றோர் மதனுக்கு தங்களது மகளை திருமணம் செய்து வைக்க விருப்பமில்லை என கூறினர்.
இதனை அறிந்து கோபம் அடைந்த மதன் என்று பள்ளிக்கு சென்றார். வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ரமணியை மதன் கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த ரமணியை சக ஆசிரியர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே ரமணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்