உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்கி போர்கேரி பகுதியில் தினேஷ் அஸ்வதி(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பூனம் என்ற மனைவி உள்ளார். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் தினேஷின் சகோதரர் மனோஜ் கடந்த இரண்டு ஆண்டாக அண்ணன் மற்றும் அண்ணியுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் மனோஜுக்கும் பூனதிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

இருவரும் பல நேரங்களில் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த தினேஷ் தனது மனைவியையும் தம்பியையும் கண்டித்தார். இதனால் கோபம் அடைந்த மனோஜும் பூனமும் இணைந்து தினேஷின் கை கால்களை வெட்டி உடலை குளத்தில் வீசிவிட்டு மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள தாமுக்கு சென்று தங்கிவிட்டனர். தங்களது அடையாளத்தை மறைத்து இருவரும் வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் உள்ளூர் மக்கள் அளித்த தகவலின் படி போலீசார் தினேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சுமார் ஆறு மாதங்கள் கழித்து மனோஜையும் பூனத்தையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.