பிரபல இயக்குனரான லோகேஷ் கனகராஜ் முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ளார். விஜய், கமலை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் ரஜினியின் கூலி திரைப்படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே முடிவடைந்தது. தற்போது போஸ்ட் ப்ரடெக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வருகிற ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி கூலி திரைப்படம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த நிலையில் சோசியல் மீடியாக்களில் இருந்து சிறிது நாட்கள் விலகி இருக்கப் போவதாக லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். கூலி படத்தின் ப்ரோமோஷன் நடைபெறும் போது மீண்டு வருவேன் என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.