CSK அணிக்கு எதிரான 68ஆவது லீக் போட்டியில், RCB அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. ரஹானே, சான்ட்னர் விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம்,ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு RCB அணி செல்லும் வாய்ப்பை உறுதிசெய்தார்.

நடப்பு சீசனின் பெரும் பரபரப்பான போட்டியாக CSK Vs RCB இடையிலான மேட்ச் நடந்து முடிந்துள்ளது. மே 3 வரை ஆடிய 8 போட்டிகளில் வெறும் ஒரேயொரு போட்டியில் வென்று கடைசி இடத்தில் இருந்த RCB அணி, தொடர்ச்சியாக 6 போட்டிகளை வென்று புள்ளிப்பட்டியலில் 4ஆம் இடத்தை பிடித்து சிறந்த கம்பேக்கை கொடுத்துள்ளது. மீம்களில் கேலி செய்யப்பட்ட அந்த அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற்றிருக்கிறது.