
சுந்தர் சி இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் நடித்து வருகிறார். இவர் கடைசியாக அரண்மனை நான்கு படத்தை எடுத்து மாஸ் ஹிட் கொடுத்தார். இந்த படத்திற்குப் பிறகு கலகலப்பு மூன்றாம் பாகத்தை எடுப்பார் என்று பார்த்தால் அதற்கு பதிலாக வடிவேலுவுடன் கேங்க்ஸ்டர் என்ற புதிய படத்தை தொடங்கியுள்ளார். கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு இடைவெளி பின் வடிவேலு- சுந்தர் சி கூட்டணி இணைகிறது என்பதால் இந்த படத்தின் மேல் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த படத்தில் வடிவேலுவுடன் சுந்தர்சி, கேத்ரின் தெரசா, வாணி போஜன் என பலரும் நடிக்கிறார்கள். காமெடி கதை களத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் வடிவேலுவுக்கு மூன்று கெட்டப் உளதாம். அதில் ஒரு கெட்டப் பெண் வேடமாம். ஏற்கனவே பாட்டாளி, தலைநகரம், நகரம் ஆகிய படங்களில் பெண் வேடத்தில் வடிவேலு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.