இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வரும் நிலையில் தற்போது கூகுள் குரோம் பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்திய கணினி அவசர நிலை நடவடிக்கை குழு ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

அதாவது விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்தும் பயனர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமெனவும் கணினி ஹேக் செய்யப்பட்டு உங்கள் முக்கியமான தரவை திருடப்படலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே கூகுள் குரோம் ஐ விரைவில் அப்டேட் செய்து கொள்ள வேண்டும் எனவும் பயனர்களுக்கு எச்சரித்துள்ளது.