
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
நேற்று குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 50 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த 24 பேர் தீ விபத்தில் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மீட்பு பணிகளை ஒருங்கிணைக்க கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் குவைத் நாட்டிற்கு செல்கிறார். 50 பேர் வரை பலியான நிலையில் அதில் 24 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும் என கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.