குவைத் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஏராளமானோர் தங்கி உள்ளனர். இந்த நிலையில் கட்டிடத்தின் சமையலறையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட நிலையில் இந்த விபத்தில் சுமார் 50 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில் இரண்டு தமிழர்கள் பலியானதாக நேற்று தகவல் வெளியான நிலையில் மேலும் ஒரு தமிழர் பலியாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தென்னவனூர் பகுதியை சேர்ந்த கருப்பணன் ராமு, குவைத் தீ விபத்தில் மூச்சு திணறி உயிரிழந்தார். இதன் மூலம் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. இதனிடையே தீ விபத்தில் ஐந்து தமிழர்கள் உயிரிழந்து உள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் இது தொடர்பான அதிகார பூர்வ தகவல் வெளியாகவில்லை என்றும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.