
குவைத் தீ விபத்தில் காயமடைந்த இந்தியர்களை வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்தனர். குறிப்பாக அதிகமாக கேரளாவை சேர்ந்தவர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களின் செலவை தமிழ்நாடு அரசு ஏற்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் கீர்த்திவரதன் சிங் நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார். நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் கீர்த்திவரதன் காயமடைந்த இந்தியர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.