
விழுப்புரம் மாவட்டம் சுதாகர் நகர் பகுதியில் இளங்கோ (33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெட்டிக்கடை வைத்து நடத்திவரும் நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக இவருக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 6 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குடும்ப பிரச்சனையின் காரணமாக இளங்கோ மிகவும் மன வேதனையில் இருந்துள்ளார்.
இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள தன் அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இளங்கோவன் சடலம் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.