
பீகாரில் 65 வயதுடைய யுகவல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் உறவினர்கள் யுகவலை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் யுகவலை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து யுகவலின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மோப்ப நாய்களை அழைத்து யுகவலை தேடி பார்த்தனர்.
\அப்போது அந்த நாய்கள் மாந்திரீக பூஜை செய்யும் சுதிர் என்பவர் வீட்டிற்கு சென்றது. இதனால் சுதிரை போலீசார் பிடித்து விசாரித்த போது குழந்தை பாக்கியம் வேண்டி நடத்தப்பட்ட பூஜையில் யுகவலை நரபலி கொடுத்தது தெரியவந்தது. இதனால் சுதிர் அவரது மூன்று சீடர்கள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதற்கு முன்பும் ஒரு வாலிபரை சுதிர் பலி கொடுத்தது விசாரணையும் தெரியவந்துள்ளது.