உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தின் சிக்கா மெத்ரே என்பவர் வசித்து வருகிறார். இவர் youtube சேனல் வைத்துள்ளார். இவர் அதில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது எப்படி என்பது குறித்து பாடம் நடத்தி வந்துள்ளார். இவர் தன்னுடைய சேனலை பிரைவேட் மோடில் வைத்திருந்ததால் இதுவரை மாட்டாமல் இருந்துள்ளார்.

இது தொடர்பாக தற்போது சமூக ஆர்வலரான நாராயணன் பரத்வாஜ் என்பவர் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து சிக்காவை கைது செய்துள்ளனர். அதோடு அவருடைய youtube சேனலையும் முடக்கியுள்ளனர். மேலும் இவர் டெல்லியில் உள்ள நேஷனல் ஃபேஷன் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட்டியில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.