
திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை 3ஆம் ஆண்டு பயிலும் பட்டியலின மாணவருக்கு சக மாணவர்கள் குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து கொடுத்த விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக குழு அமைக்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவரே புகார் மனுவை திரும்ப பெறுவதாக தெரிவித்து உள்ளதால், இது போன்ற விவகாரத்தில் புகாரை திரும்பப் பெற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிய முகாந்திரம் இருந்தால் நிச்சயமாக துறை ரீதியாக எடுக்கப்படும் என்றும் பல்கலைக்கழகம் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்படும் என்றும் திருச்சி சட்டப் பல்கலைக்கழக பதிவாளர், பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.