தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் உள்ள வீடுகளில் 2025-26 ஆம் நிதி ஆண்டிற்கான வரி வசூல் செய்வதற்காக கடந்த 12-ஆம் தேதி வசூல் பணி மேற்பார்வையாளர் அனந்த ராமகிருஷ்ணன் உள்ளிட்ட சில ஊழியர்கள் சென்றனர். அந்த பகுதியில் ஒரு வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் குளித்துக் கொண்டிருந்தார். அந்த பெண் குளிப்பதை அனந்த கிருஷ்ணன் தனது செல்போனில் வீடியோ எடுத்ததாக தெரிகிறது.

இதனை பார்த்ததும் பெண் கூச்சலிட்டதால் ஆனந்த ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஊழியர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். பாதிக்கப்பட்ட பெண் 13ஆம் தேதி நகராட்சி ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். உடனே நகராட்சி ஆணையாளர் நான்கு பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்து விசாரித்ததில் ஆனந்த கிருஷ்ணன் தவறு செய்தது உறுதியானது. இதனால் நகராட்சி ஆணையாளர் அனந்தகிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.