
சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான் இவரின் மகன் சமீர்(15) ஒன்பதாம் வகுப்பு முடித்து விட்டு பத்தாம் வகுப்பு செல்ல இருக்கிறார். இவர் திருச்சியில் உள்ள மாணவர் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்த நிலையில் விடுமுறையில் ஊருக்கு சென்ற சமீர் மற்றும் அவரின் உறவினரான ரியாஷ்(13) உட்பட நான்கு பேர் சேர்ந்து கெங்கவல்லி அருகே உள்ள ஏரியில் குளிக்க சென்றுள்ளனர்.
அப்போது குளித்துக் கொண்டிருந்த சமீரும், ரியாசும் திடீரென நீரில் மூழ்கினர். அருகில் இருந்த மற்ற சிறுவர்கள் நீரில் மூழ்கியவர்களை காப்பாற்ற முயற்சி செய்து நிலையிலும் சமீரும் ரியாசும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து இறந்த சமீரின் உடலை மீட்ட சிறுவர்கள் ரியாசின் உடலை மீட்க முடியாமல் தவித்தனர். இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின்படி சம்பவம் இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பே ரியாசின் உடலை மீட்டனர். பின்பு இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.