
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சம்பல் மாவட்டத்தில் வசிக்கும் வாலிபருக்கு கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவரது மனைவி குளிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதாக ஏற்கனவே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இளம்பெண் குளிக்க சென்றார். அந்த சமயம் அவரது கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் வேலைக்காக வீட்டை விட்டு வெளியே சென்றிருந்தனர். இந்த நிலையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த மாமியார் மருமகள் குளித்து முடித்து இருப்பார் என நினைத்தார்.
ஆனால் குளியல் அறையில் இளம்பெண் இல்லை. வீட்டில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. அப்போதுதான் வீட்டில் இருந்த பணம், நகை காணாமல் போனதை மாமியார் கவனித்தார். அவரது மருமகள் 30 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் 3 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துவிட்டு ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. இதுகுறித்து அந்த பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.