
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2a தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் ஜூலை 19 நேற்று உடன் முடிவடைந்த நிலையில் ஜூலை 20 இன்று வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இணையவழி விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி நேற்றுடன் முடிவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தொழில்நுட்ப காரணங்களால் இணைய வழியாக விண்ணப்ப கட்டணம் செலுத்துவதற்கு இயலவில்லை என்று தேர்வர்கள் புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில் தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று இன்று மாலை வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.