
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் குப்பை வண்டியில் இருந்து ஒரு பெண்ணின் பிணம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மாநகராட்சி குப்பை வண்டியை ஸ்கேட்டிங் மைதானத்திற்கு முன்பாக நிறுத்துவது வழக்கம். அதன்படி வழக்கம்போல் சம்பவநாள் இரவு டிரைவர் அங்கு வண்டியை நிறுத்திவிட்டு சென்றுவிட்டார். பின்னர் மறுநாள் காலை அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் குப்பை போடுவதற்காக வந்தபோது சாக்கு பையில் இருந்து ஒரு பெண்ணின் தலை தெரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அவர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது ஒரு பெண்ணை கொலை செய்து அவரது கை கால்களை கட்டி சாக்கு பையில் திணித்து வைத்திருந்தது தெரிய வந்தது. அந்தப் பெண் யார் என்று தெரியாத நிலையில் அவர் அணிந்திருந்த டி-ஷர்ட்டை வைத்து அவர் வேலை பார்க்கும் நிறுவனம் மூலமாக அந்த பெண் புஷ்பா என்கிற ஆஷா என்பது தெரியவந்தது. இவருக்கு 30 முதல் 35 வயதுக்குள் இருக்கும்.
இவர் வேறு மதத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்த நிலையில் யாரோ மர்ம நபர்கள் சிலர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து மூச்சு திணற வைத்து கொடூரமாக கொலை செய்து பிணத்தை குப்பை வண்டியில் வீசியது தெரிய வந்தது.
இது தொடர்பாக புஷ்பாவின் கணவரிடமும் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்த அவரை தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.