
மும்பை விமான நிலையத்தில் உள்ள கழிவறையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ஒரு குழந்தையின் உடல் கிடந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விமான நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது 16 வயது சிறுமி தனது தாயுடன் விமான நிலையத்திற்கு வந்துள்ளார். விமானம் புறப்படுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு அவர்கள் வந்து விட்டனர். இதனையடுத்து அந்த சிறுமி கழிவறையில் சென்று குழந்தை பெற்று அந்த குழந்தையை குப்பை தொட்டியில் வீசி உள்ளார்.
அதன் பிறகு ராஞ்சி செல்லும் விமானத்தில் ஏறி சென்றது தெரியவந்தது. அந்த 16 வயது சிறுமி கர்ப்பமாக இருந்தது அவரது தாய்க்கும் தெரிந்துள்ளது. குழந்தையை கழிவறையில் போட்ட பிறகு வேறு உடையை மாற்றி விட்டு இருவரும் அங்கிருந்து சென்றுள்ளனர். இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.