தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற 20-ம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான தகுதி நிபந்தனைகளை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. அதன்படி தமிழகத்தில் நிலையான மாத வருமானம் இல்லாமல் அன்றாட கூலி வேலை செய்யும் பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், கைம்பெண்கள், phh, அந்தியோதயா அன்னை யோஜனா ரேஷன் அட்டை வைத்திருக்கும் அட்டைதாரர்கள் ஆகியோருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேர்தலுக்கு தேர்தல் மட்டும் தான் அதிமுகவினர் மக்களை சந்திப்பதாகவும் தேர்தல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திமுகவினர் மக்களை சந்திப்பதாகவும் அமைச்சர் உதயநிதி கூறினார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார். அப்போது குடும்பத் தலைவிகளுக்கான உரிமை தொகை ஆயிரம் ரூபாய் குறித்து பேசுகையில் உரிய அறிவிப்பு இரண்டு முதல் மூன்று மாதங்களில் வெளியாகும் என்றும் உறுதியளித்துள்ளார்.