சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு சஜ்பஹார் கிராமத்தில் பிரமோத் காந்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் குடிபோதையில் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் தன்னுடைய காதலியையும் அவரது குழந்தைகளையும் கொன்று புதைத்து விட்டதாக கூறியுள்ளார். இது பற்றி கடந்த 23ஆம் தேதி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில் அவர்கள் பிரமோத் காந்தி சொன்ன இடத்தில் தோண்டி பார்த்தனர்.

அப்போது அங்கு ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகளின் சடலம் கிடைத்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தது சுபத்ரா தாகூர், அவரது 14 வயது மகள் மற்றும் 6 வயது மகன் என்பது தெரிய வந்தது. இதற்கிடையில் பிரமோத் காந்தி ஜார்கண்ட் மாநிலத்திற்கு பிரமோத் காந்தி தப்பி ஓடிவிட்டார்.

அங்கு விரைந்த போலீசார் வாலிபரை கைது செய்து விசாரித்ததில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தது. அதாவது கணவனை பிரிந்த சுபத்ரா தன் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த நிலையில் பிரமோத் காந்திக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில் இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்தனர். அப்போது சுபத்ரா நடவடிக்கையில் வாலிபருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் பெல்டால் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

இதேபோன்று அவரது குழந்தைகளையும் கொடூரமாக கொலை செய்த அவர் பின்னர் மூவரின் சடலங்களையும் குழிதோண்டி புதைத்து விட்டார். இதுகுறித்து மறுநாள் அக்கம்பக்கத்தினரிடம் அவர் மதுபோதையில் உலரவே தற்போது விவரம் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.