பஞ்சாப் மாநிலத்தின் பீரோஸ்பூர் மாவட்டத்திலுள்ள குரு ஹர் சாஹாய் என்ற நகரத்தில் நடைபெற்ற ஒரு உள்ளூர் கிரிக்கெட் போட்டி, வேதனையான சோக நிகழ்வாக மாறியது. DAV பள்ளி மைதானத்தில் நடந்த போட்டியில் ஹர்ஜித் சிங் என்ற வீரர், சிக்ஸ் ஒன்றை விளாசிய பிறகு சில நொடிகள் ஓய்வெடுத்து நின்றார். அதற்குப் பிறகு, திடீரென மார்வில் வலி என கூறி கீழே விழுந்தார். துரதிருஷ்டவசமாக, அங்கு மருத்துவ வசதி இல்லாததால், உடனடியாக மருத்துவ உதவி வழங்க முடியவில்லை. நண்பர்கள் CPR செய்து பார்த்தும் பயனளிக்கவில்லை.

ஹர்ஜித் சிங் ஒரு தச்சராக (carpenter) வேலை பார்த்து வந்தவர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், வெள்ளை-கருப்புச் சட்டையுடன் அவர் சிக்ஸ் அடித்ததும், தரையில் விழுந்ததும் தெளிவாக காணப்படுகிறது. மருத்துவ உதவிக்காக அழைக்கப்பட்டபோதும், அவர்கள் வரும் நேரத்தில் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார். முதற்கட்ட தகவலின்படி, திடீர் மாரடைப்புதான் அவரது மரணத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக, ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் நடைபெற்ற ஆண்டு தோணல் போட்டியில், சோனு என்ற குத்துச்சண்டை வீரர் போட்டி நடந்து கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார். மக்கள் அவரை தூக்க முயன்றபோதும், அவர் எந்த அசைவும் காட்டவில்லை. பார்வையாளர்கள் “இவ்வளவு எளிமையாக ஒருவரின் உயிர் போகும் என்றே நம்ப முடியவில்லை” என அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.‌ மேலும் இந்த இரண்டு சம்பவங்களும், உள்ளூர் விளையாட்டு போட்டிகளில் மருத்துவ வசதி மற்றும் அவசர உதவியின் அவசியத்தைக் மீண்டும் ஒரு முறை எடுத்துக்காட்டுகிறது.