
டெல்லியில் உள்ள விஹர் பகுதியில் கிரிக்கெட் சூதாட்ட கும்பலின் தலைவர் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து அங்கு சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் கிரிக்கெட் சூதாட்ட கும்பலின் தலைவனான அங்கித் கோயிலை(35) என்பவரை காவல் துறையினர் மடக்கி பிடித்தனர்.
இதைத்தொடர்ந்து அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றார்கள். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 13 பேர் கைது செய்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.2.24 கோடி ரொக்க பணமும், 18 செல்போன்களும், லேப்டாப் போன்றவற்றை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.