சென்னை மாவட்டத்தில் உள்ள எழும்பூர் காஜா மேஜர் தெருவில் சரண்(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் தலைமைச் செயலக காலனி காவல் நிலையம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் போதையில் படுத்து தூங்கினார். இந்நிலையில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் நிலைதடுமாறி கீழே விழுந்ததாகவும், அவர்களை தூக்கி விட சென்றபோது தன்னை தாக்கியதாகவும் சரண் தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் சரண் புகார் அளிக்க சென்றுள்ளார்.
அப்போது சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் சரண் போதையில் இருந்ததால் மறுநாள் காலை வருமாறு கூறினார். இதனால் கோபமடைந்த சரண் தனது கையில் வைத்திருந்த பிளேடால் தனக்குத்தானே மார்பில் சரமாரியாக கிழித்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் சரணை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு 7 தையல்கள் தையல்கள் போடப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு சரண் தனது உடலை கிழித்து காயப்படுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.