தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அந்த வகையில் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று ஒரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.