
அதிமுக கட்சியின் மூத்த நிர்வாகி எஸ்.சுதாகர் உடல் நலக்குறைவின் காரணமாக காலமானார். சென்னை புறநகர் மாவட்டம் குன்றத்தூர் அதிமுக தெற்கு ஒன்றிய பொருளாளராக இருந்தவர் எஸ் சுதாகர். இவர் உடல்நல குறைவின் காரணமாக நேற்று மரணம் அடைந்த நிலையில் அவரது மரண செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்ததாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வேதனை தெரிவித்துள்ளார்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதாகவும் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். மேலும் இவரது மறைவுக்கு அதிமுக மூத்த தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.